மகன் ஒருவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் டார்ச் லைட்டால் தந்தையை அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வசிப்பவர் மலையாளம் இவருடைய மகன் சங்கையா(38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவருக்கும் அடிக்கடி வீடு யாருக்கு என்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் இது குறித்து பிரச்சினை வந்தபோது தந்தை மகன் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சங்கையா தனது தந்தையை டார்ச் லைட்டால் பயங்கரமாக தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே மலையாளம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையாளத்தின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். பின்னர் வழக்குப் பதிவு செய்துசங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.