கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் கெளரவ் நாரயணன் தன்னுடைய மகனுக்கு தானே முடிவெட்டிய புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
‘தூங்காநகரம்’ படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கெளரவ் நாரயணன். இதையடுத்து அவர் சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கினார்.தற்போது கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் இருக்கும் கெளரவ் நாரயணன் தனது மகனுக்குத் தானே ஸ்டைலாக முடி வெட்டியுள்ளார். கோடை காலம் வர தொடங்கி விட்டதால் அதற்கு தகுந்தாற்போல் ஹேர் கட்டிங் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சலூன் கடை சண்முகம், சம்மர் கட்டிங் ஆஹ், செமையா இருக்கு, ஹேர் ஸ்டைல் சூப்பர், சார் கைவசம் இன்னொரு தொழிலும் இருக்குபோல போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/gauravnarayanan/status/1244967475818590208