Categories
சினிமா தமிழ் சினிமா

வெகு இடைவெளி….. இப்பொது தயார்…. செல்வராகவன் கதை எழுத தொடங்கிவிட்டார்..!!

இயக்குனர் செல்வராகவன் தான் அடுத்த படத்திற்கு தயாராக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

திரைப்பட உலகில் முக்கிய இயக்குனரான செல்வராகவன் 7ஜி  ரெயின்போ காலனி, புதுப்பேட்டை. இரண்டாம் உலகம் எவ்வாறு வித்தியாசமான கதைகளை கொடுத்தவர் சில நாட்களாக எந்த படத்தையும் இயக்காமல் விலகியிருந்தார்.

இவர் இயக்கி  சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி திரைப்படம் எஸ் ஜே சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்றுவரை திரைக்கு வராமல் இருக்கும் நிலையில் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாகவும் கதையை எழுதத் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த தகவலானது அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு  உள்ளாக்கியுள்ளது. செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்தது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதே போன்று கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமும் அவர்களுக்கு இருந்துள்ளது. எனவே தற்போது இவர் தெரிவித்திருப்பது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் பற்றியா  அல்லது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றியா  என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் செல்வராகவன் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |