Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி – ஸ்டாலின்!

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பல்வேறு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வேண்டியது காவல்துறையினர், சட்டத்தை கையில் எடுக்க போலீசை அனுமதித்ததன் விளைவு தான் சாத்தான்குளத்தில் நடந்துள்ள பெருங்கொடூரம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போலீசார் இருவரையும் லத்தியால் தாக்கி மிருகத்தனமாக சித்ரவதை செய்துள்ளனர், இதுகுறித்த வழக்கின் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு திமுக துணை நிற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |