Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கான தோனியின் இறுதி ஆட்டம் முடிந்தது – முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

இந்தியாவிற்கான தனது இறுதிப் போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி விட்டதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்கின்ற தோனி, கடந்த உலகக் கோப்பை தொடரிற்க்கு பின்னர் எவ்வித சர்வதேசப் போட்டிகளிலும் களமிறங்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? இல்லை ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா?என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தோனியின் தலைமையின் கீழ் விளையாடி வருபவருமான ஆஷிஸ் நெஹ்ரா, இந்திய அணிக்காக தோனி இனி விளையாடமாட்டார் என்று தான் கருதுவதாக கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்திய அணிக்காக தனது இறுதிப் போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி விட்டார் என்றே நான் கருதுகின்றேன்.வருகின்ற ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதற்கும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றே நான் நினைக்கின்றேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |