Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே!! இந்த தேதிகளில்…. இலவச தரிசன டிக்கெட்…!!

திருப்பதி கோவிலில் இந்த தேதிகளில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22, 23, 24 ஆகிய தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் 21ம் தேதியே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |