டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிட்டண் போட்டி டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை பூசணன் ஓங்பம்ரங்பான் ஆகியோர் மோதினர் .
இதில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து ,இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். இதன் பிறகு மூன்றாவது செட்டில் சிந்து அதிரடியாக விளையாடினார். இறுதியாக 21.16, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.