Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு…… பள்ளி குழந்தைகளை தூய்மை தூதர்களாக மாற்றுங்கள்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும்  காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி பேரூராட்சி ஊராட்சி மற்றும் ஒன்றிய வாரியாக குழுக்கள் அமைத்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

Image result for தமிழக அரசு

கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை தூய்மை தூதர்களாக நியமிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |