தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து கைதி 2 திரைப்படமும் வெளிவரும் தின லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். அதோடு கைதி படத்தின் போதே கைதி 2 படத்திற்கான பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், கைதி 2 படப்பிடிப்பு 30 நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும் லோகேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையி,ல் தற்போது தளபதி விஜயின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். இந்நிலையில் சர்தார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் கார்த்தி தற்போது கைதி 2 படத்தின் சூப்பர் அப்டேட்டை கூறியுள்ளார். அதாவது கைதி 2 படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். மேலும் இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்