Categories
தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கம்….. பின்னணியில் இவர்களா….? விசாரணையில் பகீர் தகவல்….!!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின்  அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன‌ ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு பிறகு 100 சர்வர்களை இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் மீட்டுள்ளனர். இதில் 5 சர்வர்களில் உள்ள புள்ளி விவரங்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் விஐபிகள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சிகிச்சை பெறும் நிலையில், நோயாளிகளின் விவரங்களை திருடி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஹேக் செய்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |