Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு தேடி சென்ற மான்….. இரும்பு கதவில் சிக்கி இறப்பு…. மதுரையில் சோகம்….!!

இரும்பு கதவில் சிக்கி உணவு தேடி வந்த புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உணவு தேடி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்த இரும்பு கதவு வழியாக செல்லும்போது மான் அதில் சிக்கிக் கொண்டது. இதனால் படுகாயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த பிறகு மானின் உடலை வனப்பகுதியில் புதைத்துவிட்டனர்.

Categories

Tech |