இரும்பு வேலியில் சிக்கி சினை மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லர் ராக் பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சருகுமான் ஒன்று நடமாடி கொண்டிருந்தது. இந்த மான் அங்குள்ள குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியபோது இரும்பு வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. இந்நிலையில் இரும்பு வேலியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானின் உடலை மீட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர் மானின் உடலை பரிசோதனை செய்த போது அது சினையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அதனை வனப்பகுதியில் புதைத்து விட்டனர்.