Categories
உலக செய்திகள்

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…. வெவ்வேறு விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறான இரு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் தண்டோ மஸ்தி கான் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பேருந்து ஒன்று காரின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தினுடைய தலைநகரான லாகூரில் பெரோஸ்பூர் சாலை அமைந்துள்ளது.

இச்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும், 1 பெண்மணியும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |