தேனியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் பிளஸ்-1 பயின்று வரும் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் சில தினங்களாகவே உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சந்தோஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.