Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் பூட்டி கிடந்த வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் முதல் மாடியில் இப்ராகிம் என்பவர் வாடகைக்கு இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வீட்டில் பத்து நாட்கள் இருந்துள்ளார். இவர் இரண்டு நாட்களாக வெளியே வராததால் குமார் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வீடு உள்ளே பூட்டியிருந்தது.

இதனால் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இப்ராகிம் பிணமாக இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்ராகிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |