Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…? காயங்களுடன் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காயங்களுடன் கண்மாய் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் இருக்கும் கண்மாயில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருப்புகொட்டை டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த நபரின் விபரம் குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல் நலம் சரி இல்லாமல் இறந்து விட்டாரா என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |