குளக்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் முத்தண்ணன் குளத்தில் ஒரு ஆணின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அந்த ஆணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அந்த குளத்தில் சடலமாக மிதந்த அந்த ஆணின் கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டு இருந்துள்ளது. அதோடு அவரது கையில் ஆறுமுகம் என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் அந்த நபரின் விவரம் குறித்தும், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.