Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உப்பாற்று ஓடை காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Categories

Tech |