Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலஅருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலஅருண் அப்பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராம்தாஸ் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராதவிதமாக பாலஅருண் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பாலஅருணை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலஅருண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |