தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாடல் அழகியான எமி ஜாக்சன். இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த இவர் லண்டனில் செட்டிலாகிவிட்டார். இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகிவிட்டார்.
இதனயடுத்து தற்போது எமி இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்படி, அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நிவிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் முடிவடைந்து விட்டது.
இதனையடுத்து, சென்னையில் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னையில் அருண் விஜய்யின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 4 வருடங்களுக்குப் பிறகு தமிழில் எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.