தமிழ் திரையுலகில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். இதனையடுத்து, சினிமாவில் தனது மார்க்கெட் போனதை உணர்ந்த இவர், தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி ஆந்திராவில் அமைச்சராக வலம் வரும் இவர் தனது தொகுதி மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரோஜா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த ஒரு சிறுமியை இவர் தத்தெடுத்துள்ளார்.
மேலும், அவரின் படிப்பு செலவையும் ஏற்றுள்ளார். அந்த சிறுமி தற்போது முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ரோஜா தனது தத்தெடுத்த மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.