தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட் சினிமாவிலும் அறிமுகம் ஆகிறார். கடந்த 7 வருடங்களாக நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு வாடகைத்தாய் முறையில் குழந்தை பிறந்ததாக தகவல் வந்ததால் வாடகைத்தாய் சட்டத்தை மீறி உள்ளனர் என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி மீது விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு வாடகைத்தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளை பற்றி எல்லாம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி கவலைப்படுவதே கிடையாது.
அவர்கள் தங்களுடைய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நயன் மற்றும் மிக்கி தம்பதி தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram