வாலிபரை தாய்மாமன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் பஞ்சவர்ணம் – லெக்கம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தீபா மணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தீபா மணிக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனை அடுத்து தீபா மணியின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த துக்க நிகழ்ச்சியில் தீபா மணியின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் அதில் தீபா மணியின் தாய் மாமனான மனோகரனும் கலந்து கொண்டார். அப்போது திடீரென தீபா மணிக்கும் மனோகரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் பிரச்சனை பெரிதடைந்து மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தீபா மணியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தீபா மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபா மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோகரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.