கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் வீட்டில் இருந்த பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதை பார்த்த அந்த சிறுவன் சீருடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி கதறி அழுகிறான். அதோடு இந்த மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்று தன்னுடைய தாயை சிறுவன் திட்டுகிறான்.
இந்நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அவனுடைய பாட்டி சமாதானப்படுத்திய நிலையில் சமாதானமாகாத சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதனையடுத்து அந்த சிறுவனின் தாயார் வந்து இந்த மரத்தை வெட்டியதற்காக நான் 10 மரங்களை நடுகிறேன் என்று சிறுவனிடம் உறுதி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிறுவன் தன்னுடைய அழுகையை நிப்பாட்டி விட்டு சமாதானம் ஆகிவிட்டான். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.