இறுதி கட்டத்தில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் , 191 ரன்களை குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், நடக்கிறது . இதில் டாஸ் வென்ற ,சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது .சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்ட்வாட் – டு ப்ளசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 25 பந்துகளில், 33 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க , அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 24 ரன்களை எடுத்து வெளியேறினார் . இதை தொடர்ந்து டு ப்ளசிஸ் 41 பந்துகளில் ,50 ரன்கள் எடுத்து வெளியேறினார் .
இந்த 2 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் பட்டேல் வீழ்த்தினார் .அதன் பிறகுஅம்பதி ராயுடு-ஜடேஜா களமிறங்கினர் .இதில் அம்பதி ராயுடு 14 ரன்களில் அட்டமிழந்தார்.இறுதி வரை அட்டமிழக்காமல் ஜடேஜா அதிரடி காட்டினார் .இவர் 28 பந்துகளில்,4 பவுண்டரி ,5 சிக்ஸரை அடித்து விளாசி , 62 ரன்கள் குவித்தார் . இறுதியில் களமிறங்கிய கேப்டன் டோனி 2 ரன்களை எடுத்தார் .இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 191 ரன்களை குவித்துள்ளது . அடுத்து களமிறங்கியுள்ள ஆர்சிபி 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது .