Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC : அம்பத்தி ராயுடு அரைசதம் ….! டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 50 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- -டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதன் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.இதில் டு ப்ளஸிஸ் 10 ரன்னில்  ஆட்டமிழக்க ,அவரை தொடர்ந்து ருதுராஜ் 13 ரன்னில் வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய ராபின்  உத்தப்பா அதிரடியாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  19 ரன்களில் ஆட்டமிழந்தார் .அடுத்து வந்த மொயின் அலி 5 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் தோனி -ராயுடு ஜோடி  நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இதில் கேப்டன் தோனி 18 ரன்னில் வெளியேற , மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அம்பத்தி ராயுடு 55 ரன்னுடன் இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது . இதில் டெல்லி அணி சார்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும் , அஸ்வின் ,  ஆவேஷ்  கான் மற்றும் ஆன்ரிச் நோர்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர் .இதையடுத்து களமிறங்கியுள்ள டெல்லி அணி 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது .

Categories

Tech |