ஆட்டோவில் வீடு ஒன்று கட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்த நவீன உலகில் பல அற்புதமான விஷயங்களும் பல அதிர்ச்சி தரும் விஷயங்களும் புதைந்துள்ளன. அதில் சில வெளியே வரும் சில விஷயங்கள் அப்படியே மறைந்து விடும். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதாவது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் பிரபு என்பவர் தனது ஆட்டோ ரிக்ஷாவை மொபைல் வீடாக மாற்றியுள்ளார்.
மேலும் அவ்வீட்டினை புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி அனைவரது பார்வைக்கும் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சில புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட சென்றபோது ஆட்டோமொபைல் வீடு அவரது பார்வைக்கு தென்பட்டது. அவ்வீட்டினை பார்த்து ஆச்சரியமடைந்த ஆனந்த் மஹிந்திரா அவரது தொழில்நுட்பத் திறனை பாராட்டியுள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள அவர் தனது பொலிரோ ஜீப்பின் மேல் அதேபோன்று தனக்கு ஒரு வீடு கட்டித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இப்பதிவு நான்காயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் பெற்றதோடு மட்டுமின்றி 2600 ரீடுவிட்களை பெற்றுள்ளது. அதனை பார்த்த இணையதள பயணி ஒருவர் அவருக்கு அருண் குமாரின் விவரங்களை அளித்ததோடு மட்டுமின்றி அவர் அவ் வீட்டிற்காக ரூபாய் ஒரு லட்சம் செலவிட்டுள்ளார் என்பதையும் கூறியுள்ளார்.