கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருந்த விக்ரமராஜாவின் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
கோயம்பேட்டில் கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருக்கும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா மீது விசாரணை கமிஷன் மற்றும் வெள்ளை அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அருண்குமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.