Categories
உலக செய்திகள்

சீனாவில் தலைத் தூக்கும் கொரோனா…. முழு ஊரடங்கு அமல்….வெளியான தகவல்….!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தற்போது மூன்று நகர்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகிலேயே சீன நாட்டில் தான் முதன் முதலில் கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. எனினும் சீனா, சிறிது காலத்திற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, அந்நாட்டிலுள்ள ஷியான், யூசோவ் மற்றும் அன்யாங் ஆகிய மூன்று நகரங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |