Categories
உலக செய்திகள்

“நீர் யானைகளையும் விட்டுவைக்கவில்லை!”…. உயிரியல் பூங்காவில் கண்டறியப்பட்ட கொரோனா…!!

பெல்ஜியத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலக நாடுகளில் மனித இனத்தை இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வரும் கொரோனா, நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் மட்டுமன்றி சிங்கம், புலி போன்ற வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அந்தவகையில், பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் என்ற நகரத்தில் பழமையான உயிரியல் பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது.

அங்குள்ள இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. 2 நீர்யானைகளுக்கும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு, பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதாக பூங்கா நிர்வாகம் கூறியிருக்கிறது.

Categories

Tech |