Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. இத்தனை கோடியா…..? பணத்தை என்ன செய்துள்ளார்கள் பாருங்கள்….!!

பிரிட்டனில் ஒரு தம்பதி லாட்டரியில்  கிடைத்த மிகப்பெரிய பரிசு தொகையை 30 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது. முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர்.

தற்போது, இவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வென்றது, மிகப்பெரிய தொகை என்பதால் அதனை 30 குடும்பங்களுக்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்து Sharon தெரிவித்துள்ளதாவது, “இதனை நாங்கள் பெருமைக்காக செய்யவில்லை.

எங்களுக்கு நெருக்கமான குடும்பங்களுக்கு செய்யும் உதவியாக பார்க்கிறோம். ஒவ்வொருவரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று காசோலைகளை கொடுத்தோம்” என்று கூறியிருக்கிறார். இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பலரும் இவர்களின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

Categories

Tech |