தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார்.
அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு என குற்றம் சுமத்திய நிலையில் அதற்க்கு தமிழக மருத்துத்வதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதில், டெண்டர் விடுவதற்கு முன்பாகவே முறைகேடு நடந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் டெண்டரே விடப்பட உள்ளது. அதற்குள் நஷ்டம் என அண்ணாமலை புகார். அண்ணாமலை அறிவு பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன் ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என விளக்கம் அளித்துள்ளார்.