Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கே.எம்.ஸ்.சி மருத்துவமனையில் ஒய்வு பெற்ற காவல் உதவியாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்ற முதியவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |