Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! கொரோனாவிலிருந்து மீள முடியுமா?…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பு?…. திணறும் மக்கள்….!!!!

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஏற்கனவே தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சமாக இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க மருத்துவர் நிபுணர்கள், மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்டம் கூட்டமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிபர் ஜோ பைடன் அரசு அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Categories

Tech |