Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000கும் மேல் அதிகரித்துள்ளது.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 1,272
கோடம்பாக்கம் – 1,077
திரு.வி.க நகரில் – 835,
அண்ணா நகர் – 586,
தேனாம்பேட்டை – 786,
தண்டையார் பேட்டை – 610,
வளசரவாக்கம் – 532,
அம்பத்தூர் – 321,
அடையாறு – 391,
திருவொற்றியூர் – 161,
மாதவரம் – 133,
பெருங்குடி – 92,
சோளிங்கநல்லூர் – 101,
ஆலந்தூர் – 84,
மணலி – 93 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 43பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,622 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |