கொரோனாவால் பாதிக்கப்பட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ்சிங் சவுகான் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.
கடந்த 25ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கோபால் மருத்துவமனையில் திரு சிவராஜ்சிங் சவுகான் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த நிலையில் வீட்டில் ஏழு நாள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு சிவராஜ் சிங் சவுகான், ராமர் கோவில் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய, மகா யாகியா இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு மோடி காட்டிய மன உறுதி மற்றும் தீர்மானம் அவரை கடந்த 500 ஆண்டுகளில் இந்தியாவின் மிக உயரமான தலைவராக்கி உள்ளதாகவும் திரு சிவராஜ் சிங் சவுகான் புகழாரம் சூட்டியுள்ளா.ர்