உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.
தொற்றிலிருந்து இருந்து மீன்டோர் எண்ணிக்கை மூன்று கோடியை தாண்டியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 மேல் நாடுகளுக்கு பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 லட்சத்து 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது.
இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 75 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டி உள்ளதோடு ஒரு லட்சத்து 53 ஆயிரத்திர்க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இதைப்போல் ரஷ்யா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ, சிலி, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு 4 கோடியே 2 லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் இதுவரை மூன்று கோடியே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸிலிருந்து மீண்டு உள்ளனர்.