Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : நாகை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு – ஆட்சியர் பிரவீன் அறிவிப்பு!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக ஆட்சியர் பிரவீன் அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 1077 மற்றும் 04365-251992 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பால், மருந்து பொருட்கள் வீட்டிற்கே வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் நாளை ஒருநாள் மட்டும் முழு முடக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரவீன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |