Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் கொரோனாவுக்கு பலி: மரண பீதியில் மக்கள்..!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன.

இந்த நிலையில், தற்பொழுது, உலகளவில் கொரோனவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,995,139 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 879,010 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் பலியானோர் எண்ணிக்கை 207,008 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான்.

இங்கு தினமும் கொத்து கொத்தாக மக்கள் கொரோனாவுக்கு மடிந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமேரிக்காவில் மொத்தம் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,87,322 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 1.18 லட்சமாக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருவதால் மக்கள் மரண பீதியில் உள்ளனர்.

Categories

Tech |