பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 2,328 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் திரு.வி.க மண்டலத்தில் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்:
திரு.வி.க நகரில் 412,
கோடம்பாக்கம் மணடலத்தில் 387,
ராயபுரம் 375,
அண்ணா நகர் 191,
தேனாம்பேட்டை – 285,
தண்டையார் பேட்டை -168,
வளசரவாக்கம்- 176,
அம்பத்தூர் – 105,
அடையாறு- 91,
திருவொற்றியூர் – 40,
ஆலந்தூர் -14,
பெருங்குடி – 20,
மாதவரம் – 30,
சோழிங்கநல்லூர் – 15,
மணலி – 13.