Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பால் 25 ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கை.. இதுவரை 5,210 பேர் குணமடைந்துள்ளனர்..!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 18,953 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,210 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 4,814 பேர் குணமடைந்த நிலையில், இன்று 5063 ஆக அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது மேலும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,942 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 6,817 பேரும், குஜராத்தில் 2815 பேரும், டெல்லியில் 2514 பேரும், ராஜஸ்தானில் 2,061 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,852 பேரும், தமிழகத்தில் 1,755 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,621 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |