தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோவால் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,227 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,339ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.07% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், திருப்பூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பில்லை. தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை – 1,380, திருவள்ளூர் – 156, செங்கல்பட்டு – 146, மதுரை – 137, திருவண்ணாமலை – 114, காஞ்சிபுரம் – 59, தேனி – 48, திண்டுக்கல் – 44, கள்ளக்குறிச்சி – 43, திருச்சி – 41, தூத்துக்குடி – 38, வேலூர் – 36, கடலூர் – 29, ராணிப்பேட்டை – 29, விருதுநகர் – 26, ராமநாதபுரம் – 22, சிவகங்கை – 20, நீலகிரி – 17, தஞ்சை – 14, கோவை – 12, பெரம்பலூர் – 12, தென்காசி – 11, திருவாரூர் – 10, தருமபுரி – 11 பேரும், விழுப்புரம் – 9,
கன்னியாகுமரி – 9, சேலம் – 7, ஈரோடு – 5, கரூர் – 3, கிருஷ்ணகிரி – 3, நாகப்பட்டினம் – 2, புதுக்கோட்டை – 12, திருப்பத்தூர் – 1, நாமக்கல் ஒருவரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.