தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3275 சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
Categories
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்குகின்றது ….!!
