சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் கொரோனா தொற்றுக்கு 1,665 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கொரோனாவிலிருந்து 187 பேர் நேற்று ஒரே நாளில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.