Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் வேல் யாத்திரையால் கொரோனா பரவும் – அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் கொரோனா பரவும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை.

பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுவிடக்கூடாது. பொது மக்களை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு. பொது மக்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை. எனவே அந்த கடமையை உணர்ந்து தான் இந்த நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

பாஜகவின் வேலி யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும். பாஜக வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கைஎடுக்கும். என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |