Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியது!

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 28 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 714ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |