தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை – 1,380, திருவள்ளூர் – 156, செங்கல்பட்டு – 146, மதுரை – 137, திருவண்ணாமலை – 114, காஞ்சிபுரம் – 59, தேனி – 48, திண்டுக்கல் – 44, கள்ளக்குறிச்சி – 43, திருச்சி – 41, தூத்துக்குடி – 38, வேலூர் – 36, கடலூர் – 29, ராணிப்பேட்டை – 29, விருதுநகர் – 26, ராமநாதபுரம் – 22, சிவகங்கை – 20, நீலகிரி – 17, தஞ்சை – 14, கோவை – 12, பெரம்பலூர் – 12, தென்காசி – 11, திருவாரூர் – 10, தருமபுரி – 11 பேரும், விழுப்புரம் – 9,
கன்னியாகுமரி – 9, சேலம் – 7, ஈரோடு – 5, கரூர் – 3, கிருஷ்ணகிரி – 3, நாகப்பட்டினம் – 2, புதுக்கோட்டை – 12, திருப்பத்தூர் – 1, நாமக்கல் ஒருவரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 28,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 23,921 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 9,00,712 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.