Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,085 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் 3, 881 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில், சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில், 3, 550 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 3 , 085 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 66 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 66 பேர் புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 465 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 956 பேர் கொரோனா நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, அதில் 796 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |