Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இதுவரை இல்லாத அளவில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் 149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தனியார் பரிசோதனை நிலையங்களில் மற்றவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |