Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 32 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 131 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 8 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 7 பேரும் என மொத்தம் 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 4,405 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,098 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 1,271 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |